Price: ₹100
Pages: 262
ISBN: ----
முனைவர் சீனிவாசன் 1925ஆம் ஆண்டு கர்நாடக கிராமப்புற ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். இவர் வறுமையில் இளம் வயதைக் கழித்தார். 1949-ல் இயந்திரப் பொறியியல் பட்டம் பெற்று H.A.Lல் சேர்ந்தார். BEMLல் துணைப் பொது மேலாளர் பதவி வகித்து 1983ல் ஒய்வு பெற்றார். கல்வியாளர், பொறியாளர், இரயில் வண்டி உருவமைப்பில் நிபுணர், விடுதலைப் போராட்ட வீரர், முதிய காந்தியவாதி, சமூகநல ஊழியர், இயற்கை மருத்துவ பரப்புனர், பத்திரிக்கையாளர், கட்டுரையாளர், இப்படிப் பல்துறை விற்பன்னரான இவர், கன்னடத்திலும் ஆங்கிலத்திலும் 80 நூல்கள் எழுதியுள்ளார். பல நிறுவனங்களில் தலைவராகவும் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். நான் கண்ட ஜெர்மனி என்ற கன்னட நூலுக்காக சாஹித்ய அகாடமி விருது பெற்றவர். கர்நாடக ராஜ்யோத்சவ விருதும், பதஞ்சலி தங்க மெடலும் கர்நாடகா அரசிடமிருந்து பெற்றிருக்கிறார். இயற்கை மருத்துவத்தில் டாக்டர் பட்டமும், யோகஸ்ரீ, ஆர்யபட்டா விருதுகளும் பெற்றிருக்கிறார். கடந்த 28 ஆண்டுகளாக கர்நாடக காந்தி நினைவு நிதியின் தலைவராக பணியாற்றிவருகிறார். 2013 ஜூன் மாதம் மைசூர் பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் அளித்து சிறப்பித்தது.