Price: ₹115
Pages: 168
ISBN: 9788123420783
உண்ணும் உணவைப் பொறுத்துத்தான் உணர்வுகள்¸ பழக்க வழக்கங்கள்¸ பண்பாடுகள் அமைகின்றன. கொன்று தின்ன அஞ்சுகின்றவனின் மனம் மென்மையாகவும்¸ கொன்று தின்பவனின் மனம் வன்மையாகவும் பெரும்பாலும் அமைந்து விடுகின்றது. கீரையைக் கூடக் கிள்ளுவதற்கு அஞ்சுகின்றவர்களும் இருக்கிறார்கள். மது¸ மாமிச வெறி கொண்டவன் பஞ்சமா பாதகங்களைச் செய்ய அஞ்சமாட்டான். ஆனால் அதே நேரத்தில் காய்கறி உணவுப் பழக்கமுள்ள ஹிட்லர் லட்சக்கணக்கான மனித உயிர்களை வதைசெய்து கொன்ற வெறியன். மனித மனதில் நல்ல உணர்வுகள் புகுந்து கொண்டிருந்தால் நல்ல சிந்தனைகளும் நல்ல செயல்களும் வெளிப்படும். 'உணவுப் பண்பாடு' என்னும் இந்நூலைத் தமிழறிஞர் அ.கா.பெருமாள் அவர்கள் பல நூல் சான்றுகளுடன் ஆய்வு செய்து ஆக்கியுள்ளார்.