Price: ₹600
Pages: 670
ISBN: 9788184469103
ரமண மஹரிஷியின் மரணானுபவமும், குர்ட்ஜிப்பின் மரண பயமும் ஒன்றே. ஆனால் அதன் பின் இருவரின் பயணமும் முற்றிலும் எதிர் துருவத்தில் ஒன்றோடொன்று முரண்பட்டுச் செல்வதை அறியலாம். இயற்கையில் அவ்வாறுதான் நிகழும். அது ஏன் ஒத்துப் போகவேண்டும்? மனித மனம் மட்டுமே தான் ஏற்கனவே கற்றறிந்த, மூளையில் தேக்கிப் படிமானமாக்கப்பட்ட அனுபவங்களையே ஒப்பிட்டுத் தேடிக் கொண்டிருக்கும் ரமண மகரிஷியைப் பொறுத்தவரை இயற்கை அவரை எங்கும் செல்லாமல் ஓரிடத்திலேயே நிலைத்து அமர வைத்து அதனை முதிர வைத்தது. ஆனால் குர்ட்ஜிப்புக்கு அது முற்றிலும் மாறாக, உலகம் முழுவதும், அதுவும் ஆபத்தான போர்க்களங்களின் ஊடே உலா வர வைத்து விரிசல் விடச் செய்தது.