Price: ₹70
Pages: 152
ISBN: -----
ஆந்திர மாநிலத்திலுள்ள சித்தூர் மாவட்டத்தில் சர்வபள்ளி என்ற கிராமம் தான் நமது தத்துவ மேதை டாக்டர். இராதாகிருஷ்ணன் இந்த உலகுக்குத் தந்து பெருமை கொண்டது. இவருடைய தந்தை வீராசாமி ஐதீகக் குடும்பத்தில் பிறந்தவரானதினால் புரோகிதத் தொழிலையும் கொண்டு விளங்கியவர். புரோகிதத் தொழிலை தன்னுடைய உபதொழிலாகத் தான் கொண்டிருந்தார். வீராசாமி சர்வப்பள்ளியிலுள்ள ஒரு பிரபல ஜமீன்தாரிடன் கணக்குப்பிள்ளை வேலை பார்த்து வந்தார். மிகவும் நேர்மையான அந்த விசுவாசியை நம்பி ஜமீன்தார் முழுப் பொறுப்பையும் ஒப்படைத்திருந்தார்.