Price: ₹350
Pages: 384
ISBN: -----
கதைசொல்லல் என்பது உலகின் எல்லா இனக்குழுக்களுக்குமான பொதுப் பண்புதான். ஆனால் படைப்பாளுமையால் கட்டமைக்கப்பட்ட சிறுகதை என்பது அமெரிக்க ஐரோப்பிய மேதைகளால் உலக மொழிகளுக்குப் பரவிய ஒரு கலைவடிவம். அது மொழிவழி வந்த பெருங்கலைகளின் அடியாகப் பிறந்த ஒரு நுண்கலை. ஆயின் கலை என்பது யாது? மனம் என்னும் னும்பொருளை ஓர் ஊடகத்தின் வழியே மலர்த்துகின்ற உத்தியா? இயற்கை பூட்டி வைத்திருக்கும் அல்லது மனிதன் மறைத்து வைத்திருக்கும் ஜீவரகசியங்க்களை அவிழ்த்து காட்டும் அற்புதமா? தன் உடலை திருப்தி செய்வதிலேயே வாழ்வு கழிக்கும் மனிதக் கூட்டத்திற்கு உடலுக்கு வெளியே உள்ள உலகத்தின் வழியையும் வலிமையையும் எடுத்துச் சொல்லும் ஏற்பாடா?